close
Choose your channels

எஸ்பிபிக்காக கூட்டுப்பிரார்த்தனை: மெழுகுவர்த்தி ஏந்தி ரசிகர்கள் பிரார்த்தனை

Thursday, August 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் நலமுடன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என இன்று மாலை 6 மணிக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களும் பிரார்த்தனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது

இந்த அழைப்பை ஏற்று இன்று லட்சக்கணக்கானோர் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் எஸ்பிபி ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனை செய்து வருவதாகவும் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளிலும் ரசிகர்கள் ஏராளமானோர் கூடி கூட்டுப்பிரார்த்தனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் பல ரசிகர்கள் எஸ்பிபியின் படத்தை கையில் ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பெரும்பாலான திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று உள்ளனர் என்றும் அவரவர் வீட்டு வாசல்களில் நின்று மௌனப் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எஸ்பிபிக்காக கூட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும், ஒரு பாடகருக்காக உலகமே ஒன்று சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டுப் பிரார்த்தனை பலனாக நிச்சயம் எஸ்பிபி அவர்கள் கூட நலமடைந்து குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் அனைவரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.