close
Choose your channels

விமான விபத்து… பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துடன் பலியான சோகம்!

Friday, December 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென் அமெரிக்க நாடான டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமான விபத்து ஏற்பட்டு பிரபல இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் 4 வயது குழந்தை, நண்பர்கள் எனப் பலரும் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் தனது இசையின் மூலம் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். அவர் தன்னுடைய மனைவி டெபி வோன் மேரி ஜிமினெஸ் கார்சியா, 4 வயது குழந்தை ஹைடன் ஹெர்னாண்டஸ் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 7 பேருடன் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து டொமினிக்கன் நாட்டின் லா இஸபெல்லா நகருக்குத் தனியார் விமானம் மூலம் சென்றுகொண்டிருந்தார்.

லிடோச அவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் நடுவழியில் சான் டொமிங்கோ நகரத்தில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கப்பட்டது. பின்னர் 10 நிமிடம் கழித்து மீண்டும் அங்கிருந்து புறப்பட முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. இதில் இசையமைப்பாளர் உள்ளிட்ட அவரது நண்பர்கள், உறவினர்கள் 7 பேரும் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் விமானம் அவசரமாக தரையிறங்கி பின்னர் மீண்டும் புறப்பட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோசமாக விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் உயிரிழந்துள்ளதால் அவருடைய ரசிகர்கள் கடும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.