close
Choose your channels

7 நாளில் மன்னிப்பு. பீட்டா நிர்வாகிக்கு சூர்யா வழக்கறிஞர் நோட்டீஸ்

Saturday, January 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிரியான பீட்டா அமைப்பு சமீபத்தில் நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த கருத்துக்கு 7 நாட்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சூர்யாவின் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் பீட்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சூர்யாவின் 'சி 3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் கடந்த சில நாட்களாக சூர்யா ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து கருத்து கூறிய பீட்டா நிர்வாகி ஒருவர் 'சி 3', படத்தின் மலிவான விளம்பரத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு குறித்து பேசி வருவதாக கூறினார். இதற்கு சூர்யா தரப்பில் இருந்து தற்போது வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சூர்யா ஏற்கனவே பலமுறை ஜல்லிக்கட்டுக்காகவும், மற்ற பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார். 'சி 3' திரைப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் மலிவான விளம்பரம் தேடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எனவே அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து கூறிய பீட்டா நிர்வாகி நிபந்தனையற்ற மன்னிப்பை எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த மன்னிப்பு கடிதத்தை ஊடகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் பீட்டா நிர்வாகிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.