close
Choose your channels

காக்கா - கழுகு குறித்து 'நச்' கருத்து பேசிய லெஜண்ட் சரவணன்...!

Sunday, November 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக காக்கா கழுகு கதை சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து லெஜன்ட் சரவணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியதாவது:

எந்த ஒரு நாட்டில் வியாபாரம் செழிப்பாக இருக்கிறதோ அந்த நாட்டில் பொருளாதாரம் செழிப்பாக இருக்கும். ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையில் வியாபார சுழற்சி பங்காற்றி வருகிறது



நம் நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக இருந்தால் நம் நாட்டின் பொருளாதாரமும் வளமிக்கதாக மாறும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்திற்கு அதில் உள்ள உண்மைத்தனம், கடினமான உழைப்பு மிக முக்கியம்

இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதில் காக்கா கழுகு கதைகள், இவருக்கு அந்த பட்டம், இவருக்கு இந்த பட்டம் என்ற பிரச்சனைகள் இருந்தால், அதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது.



நாம் உழைத்தால் மட்டும் தான் உயர முடியும், நாம் உயர்ந்தால் நம்ம நாடும் உயரும். உழைப்போம், உயர்வோம், நாம் நாட்டையும் உயர்த்துவோம், அன்பால் இணைந்து செயல்படுவோம்’ என்று லெஜண்ட் சரவணன் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.