close
Choose your channels

கேரள வெள்ள நிவாரண நிதியாக லைகா நிறுவனம் தந்த தொகை

Thursday, August 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து அம்மாநில மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர இந்தியா முழுவதிலும் இருந்து நிதிகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகினர் பலர் லட்சக்கணக்கிலும் ஒருசிலர் கோடிகளிலும் நிதியை தாராளமாக வழங்கி வருகின்றனர். இன்று காலை நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் நிதிவழங்கவிருப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான லைகா நிறுவனம் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அறிவித்துள்ளது.

ஏற்கனவே கார்த்தி-சூர்யா இணைந்து ரூ.25 லட்சம், கமல்ஹாசன் ரூ.25 லட்சம், விஜய்சேதுபதி ரூ.25 லட்சம், ரஜினிகாந்த் ரூ.15 லட்சம், தனுஷ் ரூ.15 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம், சித்தார்த் ரூ.10 லட்சம், நயன்தாரா ரூ.10 லட்சம், விஷால் ரூ.10 லட்சம், ரோஹினி ரூ.2 லட்சம் என வெள்ள நிவாரண நிதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.