close
Choose your channels

அடுத்தடுத்து இரண்டு பிரபலங்களை இயக்கும் மாரி செல்வராஜ்.. அப்ப ரஜினி படம் டிராப்பா?

Friday, March 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் படத்தை இயக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்தடுத்து இரண்டு பிரபல நடிகர்களின் படங்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ரஜினி படத்தை அவர் இயக்குவதாக இருந்த நிலையில் அந்த படம் அனேகமாக ட்ராப் செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ் ’பரியேறும் பெருமாள்’ ’கர்ணன்’ ’மாமன்னன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது துருவ் விக்ரம் நடிக்க உள்ள கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது என்றும், இந்த படத்தில் துருவ் விக்ரம், கபடி வீரராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்த ஆண்டு கார்த்தி படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்தி படத்தை முடித்துவிட்டு அவர் தனுஷ் நடிக்க உள்ள திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் 172வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் கார்த்தி மற்றும் தனுஷ் படங்களை அடுத்தடுத்து இயக்க மாரி செல்வராஜ் ஒப்புக்கொண்டுள்ளதால் ரஜினி படம் டிராப் ஆகலாம் அல்லது தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.