close
Choose your channels

அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகள் விபச்சாரம்: தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட சிக்கல்

Tuesday, June 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தெலுங்கு இணை தயாரிப்பாளர் ஒருவர் தெலுங்கு நடிகைகளை அமெரிக்காவுக்கு அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலர் அவருக்கு வாடிக்கையாளராக இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனையடுத்து அந்த இணை தயாரிப்பாளரும் அவருடைய மனைவியும் அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டனர் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் தெலுங்கு நடிகைகள் அமெரிக்காவுக்கு சென்றாலே அவர்கள் மீது அமெரிக்க போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் விசாரணை தீவிரமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உண்மையிலேயே சுற்றுலா, படப்பிடிப்பு மற்றும் அமெரிக்காவில் உள்ள உறவினர்களை பார்க்க செல்லும் தென்னிந்திய நடிகைகளும் அமெரிக்க போலீசார்களின் சந்தேக பார்வையில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் கனடாவில் நடந்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அமெரிக்கா சென்ற நடிகை மெஹ்ரீன் பிர்ஜதாவையும் அமெரிக்க போலீசார் சந்தேகக்கண்ணுடன் விசாரித்ததாகவும், அதன் பின்னர் மெஹ்ரீன் கூறிய விளக்கத்தை அடுத்து அவரிடம் அமெரிக்க போலீசார் வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அமெரிக்க போலீசார் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாலும் ஒருசிலர் செய்யும் தவறால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுவதாக மெஹ்ரீன் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

நடிகை மெஹ்ரின் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் தற்போது 'நோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.