close
Choose your channels

பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை' இசையால் நிரப்பிய சத்யா

Sunday, November 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தின் கதையையும் காட்சிகளையும் பார்வையாளனின் மனதில் விதைக்கும் வகையில் கொண்டுபோய் சேர்ப்பது பின்னணி இசை என்று கூறினால் மிகையாகாது. இதற்கு இசைஞானியின் பல படங்களை உதாரணமாக கூறலாம்.
அந்த வகையில் பார்த்திபன் இயக்கியுள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் இசையமைப்பாளர் சி.சத்யா, இந்த படத்திற்காக 'மெலோடிக்கா' என்னும் இசைக்கருவின் உதவியுடன் இசையமைத்துள்ளார். இந்த கருவியால் தன்னால் முடிந்தவரை பார்த்திபனின் கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பியுள்ளதாகவும், இந்த படத்தின் ஆறு பாடல்களும் பார்த்திபன் அவர்களுக்கு பிடித்தது போல் நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என தான் நம்புவதாகவும் சத்யா கூறியுள்ளார்.
இந்த படத்தின் பின்னணி இசைக்காக பயன்படுத்தப்பட்ட 'மெலோடிக்கா' என்னும் இசைக்கருவி இந்த படத்தின் கதைக்களமாகவும் இருப்பதால் பார்வையாளர்கள் நிச்சயம் இந்த படத்தின் மூலம் புதுவித அனுபவத்தை பெறுவார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.