close
Choose your channels

வரும் வெள்ளி முதல் மீண்டும் கெத்து காட்டும் மெர்சல்

Wednesday, October 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த புதன்கிழமை தீபாவளி அன்று வெளியாகி வசூலிலும் மெர்சல் காட்டியது என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த படத்திற்கும், படத்தின் வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள், படத்திற்கு குவிந்த ஆதரவால் காணாமல் போனார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் மெர்சலாகிய இந்த படம் வரும் வெள்ளி முதல் அதாவது அக்டோபர் 27 முதல் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாகாணங்களிலும், உலகமெங்கும் உள்ள தெலுங்கு ரசிகர்களுக்காகவும் ரிலீஸ் ஆகவுள்ளது.

'அதிரிந்தி' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு தமிழை போலவே சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் வெள்ளி முதல் மீண்டும் கெத்து காட்ட தயாராகும் 'மெர்சல்' படத்தின் தெலுங்கு பதிப்பை வரவேற்க தெலுங்கு ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர் என்பது குவிந்து வரும் டுவிட்டரில் இருந்து தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.