close
Choose your channels

தன்யா ராஜேந்திரன் விவகாரம்: விஜய் வெளியிட்ட அறிக்கை

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் விஜய்யின் 'சுறா' படம் குறித்து எதிர்மறை பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தன்யா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தன்யா ராஜேந்திரன் விஜய் இதுகுறித்து தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி நேற்றிரவு விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சமுதாயத்தில் பெண்களை அதிகளவில் மதிப்பவன் நான். யாருடைய படத்தையும் யாரும் விமர்சனம் செய்யலாம். எக்காரணம் கொண்டும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சனம் செய்யக்கூடாது என்பது எனது கருத்து. அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். சமூக வலைதளத்தில் யாருடைய மனதும் புண்படும்படி தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்' என்று கூறியிருந்தார்.

விஜய்யின் இந்த அறிக்கைக்கு தன்யா ராஜேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.