close
Choose your channels

நான் பலிகடா ஆகிவிட்டேன்.. சென்னை இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்..!

Monday, September 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை இசை நிகழ்ச்சியில் நடந்த குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நான் பலிகடா ஆகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்

சென்னையில் நடந்த ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமான டிக்கெட் கொடுத்ததால் பலர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து ஏராளமானோர் திரும்பி சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஒரு இசையமைப்பாளராக ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணமாக இருந்தது. மழை பெய்யக் கூடாது என்பதை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாமல், உள்ளே மகிழ்ச்சியாக இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தேன். ஆனால் மக்கள் எல்லோரும் விழித்துக் கொள்ள நான் பலிகடா ஆகிவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் உலக தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அங்கே உருவாக வேண்டும், அதற்கு இறைவன் நாடினால் நடக்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.