close
Choose your channels

விடிய விடிய நடந்த பொதுக்குழு முன்னேற்பாடுகள் மண்வெட்டியை தூக்கிய விஷால்

Sunday, November 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு லயோலா கல்லூரியில் இருந்து தி.நகரில் உள்ள நடிகர் சங்கத்தின் சொந்த இடத்தில் மாற்றப்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே நேற்று பார்த்தோம். இந்நிலையில் இதுகுறித்து பொதுச்செயலாளர் விஷால் கூறியதாவது:
லயோலா கல்லூரியின் நிர்வாகத்திற்கு மர்ம நபர்களால் வந்த மிரட்டல் காரணமாக நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளது. எனவே நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தை எங்களுடைய சொந்த இடத்திற்கு மாற்றியுள்ளோம். இதற்கான முறைப்படி நடவடிக்கையும் போலீஸ் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்ற சொல்லிற்கேற்ப எங்களுடைய சொந்த நிலத்திலேயே பொதுக்குழுவை நடத்த உதவிய மர்ம நபருக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். இன்னும் ஒருசில நிமிடங்களில் பொதுக்குழு நடத்த ஏதுவாக இந்த இடம் மாற்றும் பணி தொடங்கப்படும். நாங்கள் எல்லோரும் மண்வெட்டியை தூக்க போகிறோம்.
பொதுக்குழு நடத்தும் இடம் மட்டுமே மாறியுள்ளது. மற்றபடி திட்டமிட்டபடி பொதுக்குழு, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழா, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா ஆகியவை நடத்தப்படும். மேலும் மூத்த கலைஞர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டு விருதுகளும் அளிக்கப்படும்' என்று விஷால் கூறினார்.
விஷாலின் பேட்டியை அடுத்து நடிகர் சங்கத்தின் இடத்தில் ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு விடியவிடிய இடத்தை சீர்செய்யும் பணிகள் நடந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.