close
Choose your channels

பிரதீப் மீது கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் வருத்தமா? நெட்டிசன்கள் சொல்லும் பாயிண்ட்ஸ்..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன், ஒரு பிக் பாஸ் போட்டியாளரை வெளியேற்றுவதற்கு அவ்வளவு சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார். முதல் சீசனில் மக்களால் வெறுக்கப்பட்ட ஜூலியை கூட அவர் வெளியே அனுப்பும் போது ’இவர் என் தங்கை போன்றவர், இவரை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது’ என்று மரியாதையாக அனுப்பி வைத்தார்.

அப்படிப்பட்ட உலகநாயகன் கமல்ஹாசன் பிரதீப்பை யோசிக்காமல் உடனே ரெட் கார்டு கொடுக்க அனுமதித்ததும் அவரை வெளியேற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் சில கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கமலஹாசனுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிரதீப் மீது தனிப்பட்ட முறையில் வருத்தம் இருப்பதாகவும், குறிப்பாக கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான பிக்பாஸ் போட்டியாளர் பாவா செல்லதுரை குறித்து பிரதீப் ஒரு குற்றச்சாட்டு கூறினார். அப்போதே பிரதீப் மீது ஒரு கரும்புள்ளி கமலஹாசனுக்கு விழுந்தது

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் ’கமல் சார் கூறினாலும் கூட நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், நான் செய்தது சரிதான் என்று பிரதீப் கூறினார். கமல்ஹாசன் என்ன சொன்னாலும் அனைத்து போட்டியாளர்களும் சரி என்று ஒப்புக்கொள்ளும் வகையில் அவருக்கு மரியாதை இருக்கும் நிலையில் பிரதீப் இவ்வாறு கூறியது கமல்ஹாசனுக்கு பிரதீப் மீது வெறுப்பு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்

இதையெல்லாம் மனதில் வைத்து தான் ஒரு சான்ஸ் கிடைத்தபோது ரெட் கார்ட் என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி பிரதீப்பை கமல் வெளியேற்றி விட்டார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.