close
Choose your channels

துபாயில் எனக்கு  அரசியல்வாதி வீடு வாங்கி கொடுத்தாரா? ஆவேச அறிக்கை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்..!

Tuesday, March 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரசியல் விமர்சகர் ஒருவர் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு பிரபல அரசியல்வாதி ஒருவர் 50 கோடி ரூபாய்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

எனக்கு ஒரு அரசியல்வாதி தாராளமாக பணம் செலவு செய்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது, இப்படி பேசுபவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கும் முன் மனிதநேயத்துடன் அந்த தகவலை சரி பார்ப்பார்கள் என்று அமைதியாக இருந்தேன். கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் காரணமாக நானும் என் குடும்பமும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் தயவு செய்து யோசியுங்கள்.

கண்ணியமான குடும்பத்திலிருந்து நான் இருந்து வருகிறேன், 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் துபாயில் தான் இருக்கிறோம், 16 வயதில் இருந்தே நான் சம்பாதித்து வருகிறேன், 20 படங்களுக்கு மேல் நான் சினிமாவில் நடித்து விட்டேன், இதுவரை நானாக போய் யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை, அனைத்து வாய்ப்புகளும் எனக்கு தானாகவே வந்தது, பணத்தின் மீது எனக்கு எப்போதுமே பேராசை இருந்ததில்லை.

என்னை பற்றி வெளியான தகவலில் சிறிதும் உண்மை இல்லை, 2002 ஆம் ஆண்டு முதல் துபாயில் நாங்கள் வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறோம், எனக்கு கார் ரேஸில் விருப்பம் உண்டு, சென்னையில் நடத்தப்படும் ரேஸ் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, நானும் என் குடும்பமும் மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறோம். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து இப்போதுதான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம்.

உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை போலவே நானும் கண்ணியமான அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். இந்த விவகாரத்தை நான் சட்ட ரீதியாக எதிர் கொள்ளவில்லை. காரணம் பத்திரிகையாளர்கள் மத்தியில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கும் என்று நம்புகிறேன். அவர்கள் என்னை இனிமேல் அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரை கெடுக்கும் முன்பு அந்த தகவலை தயவு செய்து உறுதி செய்து கொள்ளும்படி பத்திரிகையாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.