close
Choose your channels

இனிமேல் பாக்க முடியுமா? பாத்தாலும் தடவி தூங்க வைக்க முடியுமா? ஐஷுவை நினைத்து புலம்பும் நிக்சன்..

Tuesday, November 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஷு வெளியேறியது நிக்சனை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் அவர் பார்க்கும் போட்டியாளர்களிடம் எல்லாம் ஐஷு வெளியேறியது குறித்து புலம்பி வரும் காட்சியின் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த வாரம் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஐஷு எவிக்சன் செய்யப்பட்டார். அவரது வெளியேற்றம் நிக்சனை பெரும் அளவு பாதித்தது. அவர் சகப் போட்டியாளர்களான விக்ரம், அக்ஷயா, ஜோவிகா உள்ளிட்டோரிடம் புலம்பி கொண்டு இருந்தார்.

ஐஷு ஊட்டியை சேர்ந்தவர் என்பதால் இனிமேல் அவரை ஊட்டி சென்றா நான் பார்க்க முடியும்? ஒரு வேலை பார்த்தாலும் பக்கத்தில் உட்கார வைத்து தடவி தூங்க வைக்க முடியுமா? என்று புலம்பியது போட்டியாளர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பார்வையாளர்கள் ஆச்சரியமாக இந்த வீடியோவுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் விக்ரமிடம் நிக்சன் பேசியபோது 'ஐஷு ஒரு குழந்தை என்றும், அவரை வெளியேற்றியது அநியாயம் என்றும் கூறினார்,. மேலும் ஒரு பையனும் ஒரு பெண்ணும் பேசினாலே எல்லோரும் தப்பாக நினைக்கிறார்கள், ஒரு பையனும் பெண்ணும் பேசினால் அது காதலாக தான் இருக்க வேண்டுமா? என்ற கேள்வியும் அவர் எழுப்பினார். ஆனால் நிக்சனின் இந்த வீடியோவுக்கு கேலியும் கிண்டலும் செய்து நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.