close
Choose your channels

'தர்பார்' கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்: திடீர் திருப்பம்

Tuesday, January 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்’ திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் இதுவரை இல்லாத அளவில் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. விமானத்தில் 'தர்பார்’ படத்தின் போஸ்டர், ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவும் ஏற்பாடு ஆகியவை இந்த படத்தின் பிரமாண்ட புரமோசன்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் 'தர்பார்’ படத்தின் கட்டவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர்தூவ அரசு அதிகாரிகளிடம் ரஜினி ரசிகர்கள் அனுமதி பெற்று விட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த அனுமதியில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் 'தர்பார்’ திரைப்படத்தின் கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவ போலீசார் அனுமதி மறுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.