close
Choose your channels

அரவிந்த்சாமியும் இல்லை, நிவின்பாலியும் இல்லை.. ஜெயம் ரவி கேரக்டரில் இவர்தான்: 'தக்லைஃப்' அப்டேட்..!

Sunday, March 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி நடிக்க இருந்த நிலையில் இருவரும் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் துல்கர் சல்மான் கேரக்டரில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் ஜெயம் ரவி கேரக்டரில் நடிக்க அரவிந்த்சாமி, நிவின் பாலி உள்ளிட்ட சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி ஜெயம் ரவி கேரக்டரில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இதற்கான இறுதி கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அருண் விஜய் மற்றும் சிம்பு ஆகிய இருவருமே மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் மீண்டும் இருவரும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும், ஏஆர் ரகுமான் இசையில் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.