close
Choose your channels

இதற்காகத்தான் படபூஜையில் கலந்து கொள்வதில்லை: சமந்தா

Wednesday, July 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தாவுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டகரமான ஆண்டு என்றே கூறலாம். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 'ரங்கஸ்தலம்', 'நடிகையர் திலகம்' மற்றும் இரும்புத்திரை' ஆகிய மூன்று படங்களும் வெற்றி பெற்றன. அதேபோல் அவர் நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள 'சீமராஜா' மற்றும் 'யூடர்ன்' ஆகிய படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் கணவர் நாகசைதன்யாவுடன் சமந்தா ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இந்த பூஜையில் கலந்து கொண்ட சமந்தா, பூஜையின்போது தேங்காய் உடைத்தார். ஆனால் அவரால் தேங்காயை உடைக்க முடியவில்லை. பின்னர் தேங்காயை உடைக்க பூஜை செய்த ஐயர் உதவி செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இந்த வீடியோ குறித்து சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த ஒரு காரணத்திற்காகவே நான் படபூஜையில் கலந்து கொள்வதில்லை' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.