close
Choose your channels

சென்னை வருகையின் நோக்கம் என்ன? பவன்கல்யாண் விளக்கம்

Wednesday, November 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் இன்று சென்னை வந்துள்ளார். தெலுங்கு மாநிலங்களில் தனது கட்சியை விரிவுபடுத்தியது போல் தமிழகத்திலும் அவர் தனது கட்சியை பிரபலப்படுத்த வருகை தந்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ளன. இனிமேல் இங்கு புதிய கட்சிகள் தேவையில்லை. இருப்பினும் தென்னிந்திய அளவில் கட்சிகளுக்குள் ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தென்னிந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க தென்னிந்திய அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவும் தான் சென்னை வந்துள்ளேன்.

இப்போதும் எதிர்காலத்திலும் எனது கட்சியை தமிழகத்தில் விரிவுபடுத்தும் திட்டம் இல்லை. நான் கட்சி ஆரம்பித்தவுடன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு சென்றுள்ளேன், ஆனால் பக்கத்தில் மாநிலத்தில் உள்ளவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? என்பதை நான் அறியவில்லை. எனவே தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளவே சென்னை வந்துள்ளேன்' என்று பவன்கல்யாண் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.