close
Choose your channels

வெற்றிமாறனின் குறிப்பிட்ட ஜாதி வெறுப்பு வெளிப்படுகிறது: இயக்குனர் பேரரசு விமர்சனம்..!

Wednesday, January 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இடம் பெற்றது அடுத்து அந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ஓடிடி தளத்திலிருந்து ’அன்னபூரணி’ திரைப்படத்தை நீக்கியது.

இது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது: ’சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்படங்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால் தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு திரைப்படத்தை புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கு நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வெற்றிமாறனின் கருத்துக்கு இயக்குனர் பேரரசு கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

வெற்றிமாறனின் கருத்தை வரவேற்கிறேன்! இதே கருத்தை ’கேரளா ஸ்டோரி’ படத்தின் போது தெரிவித்திருந்தால் அவரது சினிமா பற்று உறுதியாயிருக்கும். அன்னபூரணிக்கு தெரிவிக்கும்போது அவரின் குறிப்பிட்ட ஜாதி வெறுப்பு தான் வெளிப்படுகிறது! திரைப்பட பற்றாளனாய் இருங்கள் வெற்றிமாறன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.