close
Choose your channels

ரஜினியின் 'பேட்ட' படம் குறித்த முக்கிய அப்டேட்: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு

Thursday, October 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு வாரணாசி அருகே தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் முடிந்துவிடும் என்றும் பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் 'பேட்ட' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது தெரிந்ததே. இதனையடுத்து இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

இந்த செய்தி வெளீயாகி ஒருசில நிமிடங்கள் கூட ஆகவில்லை ஆனால் அதற்குள் #PettaSecondLook என்ற ஹேஷ்டேக் சமூக இணையதளத்தில் டிரெண்டுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒருசில நிமிடங்களில் பேட்ட' படத்தின் செகண்ட் லுக்கை பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.