close
Choose your channels

கோவை வந்திறங்கிய 'பொன்னியின் செல்வன்' டீம்..  விக்ரம் வெளியிட்ட செம்ம புகைப்படம் ..!

Sunday, April 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று இந்த படத்தின் ஆந்தம் பாடல் வெளியான நிலையில் இந்த பாடல் வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை 4:30 மணிக்கு கோயம்புத்தூரில் பிரமாண்டமாக நடைபெற உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 'பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் சற்றுமுன் கோவை வந்து இறங்கி உள்ளனர்.

இதுகுறித்து நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'கோயம்புத்தூர்!! இதோ வர்ரோங்கண்ணா!! என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos