close
Choose your channels

அஜித், சிவகார்த்திகேயன் பட நடிகர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்: அதிர்ச்சியில் திரையுலகினர்

Thursday, February 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்த நடிகர் மற்றும் இயக்குனர் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது திரையுலகினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

அஜித் நடித்த ’ஆரம்பம்’ சிவகார்த்திகேயன் நடித்த ’வேலைக்காரன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும், பல இந்தி மராத்தி, பெங்காலி, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் மகேஷ் மஞ்ச்ரேக்கர். இவர் நடிகர் மட்டுமன்றி ஒரு சில திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர், மராத்தி படம் ஒன்றை இயக்கினார். இந்த படம் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த படத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இது குறித்து மகேஷ் மஞ்ச்ரேக்கர் கூறியபோது இந்தப் படம் தணிக்கை செய்யப்பட்ட போது எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் இது வயது வந்தோருக்கான படம் என்றுதான் நாங்கள் அறிவித்து உள்ளோம் என்றும் பெண்களை மோசமாக எந்த வகையிலும் சித்தரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.