close
Choose your channels

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் திடீர் மாயம்: நடந்தது என்ன?

Friday, December 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை திடீரென காணவில்லை என அவரது மனைவி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்து அதன் பின் சிலமணி நேரங்களில் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் தமிழக, மற்றும் டெல்லி போலீசார்களால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனை திடீரென காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் திடீரென ஜுலி தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

தனது கணவர் பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னிடம் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டதாகவும், போன் செய்தபோதும் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்றும், ஒருவேளை போலீசார்களால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகார் மனு அளித்ததாகவும் கூறினார் ஆனால் சற்றுமுன்னர் அவர் ஊட்டியில் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் புகாரை வாபஸ் பெற்றதாக கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.