close
Choose your channels

காசு வந்தா காக்கா கூட கலராயிடும்ன்னு சொல்லுவாங்க.. 12 வருடத்திற்கு முந்தைய வீடியோவை வெளியிட்ட ப்ரியா பவானி சங்கர்..!

Sunday, April 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காசு வந்தா காக்கா கூட கலராயிடும்ன்னு என்று சிலர் சொல்லுவாங்க, ஆனால் அந்த காசு தானாக வராது, நீங்கள் உலகத்துடன் சண்டையிட்டு பெற வேண்டும் என்று நடிகை பிரியா பவானி சங்கர் 12 வருடத்திற்கு முன் தான் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் போது கௌதம் மேனனை பேட்டி எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர் என்பதும் அவர் தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் உடன் ப்ரியா பவானி சங்கர் நடித்த ’ருத்ரன்’ திரைப்படம் கடந்த வெள்ளி என்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் அதற்கு முன் அவரது நடிப்பில் வெளியான ’பத்து தல’ ’அகிலன்’ ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். அதனை அடுத்து ’சூப்பர் சிங்கர்’ உள்பட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய பிரியா பவானி சங்கர், ’மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ’கடைக்குட்டி சிங்கம்’ ’மான்ஸ்டர்’ ’ஓ மணப்பெண்ணே’ ’யானை’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தொலைக்காட்சியில் வேலை பார்த்தபோது இயக்குனர் கௌதம் மேனனை பேட்டி எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த இந்த வீடியோ குறித்து அவர் குறிப்பிட்ட போது ’இந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்கு எனது நன்றி! எனது சுவாரசியமான பயணத்தை உணர முடிகிறது. உடலையும் தோற்றத்தையும் வைத்து சிலர் உங்களை காயப்படுத்துவார்கள், ஆனால் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதை மற்றவர்கள் முடிவு செய்ய அனுமதிக்காதீர்கள், நீங்கள் தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

உங்களிடம் நல்ல தோற்றம், உடல்வாகு, நிறம் இல்லை என்றால் பரவாயில்லை. இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை வைத்து எதனையும் முடிவுக்கு வராதீர்கள். நான் இன்று தயாராக எனக்கு 10 பேர் கொண்ட குழு இருக்கிறார்கள், அழகுக்கு இதுதான் வரையறை என்று எதுவும் இல்லை, அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்.

காசு வந்தால் காக்கா கூட கலராயிடும்ன்னு என்று சொல்வார்கள், ஆனால் காசு தானாக வராது, நீங்கள் உலகத்துடன் சண்டை இட்டு அதன் பிறகு தான் காசை பெற வேண்டும், உங்களுக்கு அது கிடைக்கும்போது அதை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். கலராக வேண்டும் என்று எந்த அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நான் தனது காதலர் ராஜவேலுக்கு லவ் யூ சொன்ன அவர் அப்போது நீ எப்படி பார்த்தாயோ அப்படியே தான் நான் இன்றும் நான் இருக்கிறேன், நீங்கள் இது போன்ற நபரை கண்டுபிடித்தால் விட்டு விடாதீர்கள்’ என்று குறிப்பிட்டார். பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.