close
Choose your channels

பிரதமர் பாராட்டிய பிரியாமணி நடித்த படம்.. வளைகுடா நாடுகளில் தடை..!

Monday, February 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பிரதமர் மோடி அவர்களும் பாராட்டு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பிரியா மணி மற்றும் யாமி கவுதம் முக்கிய கேரக்டர்களில் நடித்த ’ஆர்ட்டிகிள் 370’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது என்பதும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆர்ட்டிகிள் 370’ திரைப்படத்தை தடை செய்வதாக வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் இந்திய மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்த ’ஃபைட்டர்’ திரைப்படமும் சில காரணங்களுக்காக தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் பாராட்டிய ஒரு திரைப்படத்தை வளைகுடா நாடுகள் தடை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.