close
Choose your channels

தனுஷ் படத்தில் மீண்டும் இணைந்த பிரியங்கா மோகன்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்..!

Wednesday, March 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்திலும் பிரியங்கா மோகன் இணைந்துள்ளதாகவும் ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் இயக்கி நடித்துள்ள 50வது திரைப்படமான ’ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது இயக்கத்தில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படமும் உருவாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ப்ரோமோஷன் பாடலில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ட்விஸ்ட்டாக இந்த பாடல் புரமோஷனுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் என்றும் படத்தில் இந்த பாடல் இடம் பெறாது என்று தெரிகிறது

தனுஷின் சகோதரி மகன் வருண் என்பவர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அனிதா சுரேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos