close
Choose your channels

தமிழக அரசை நம்புகிறோம்: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

Monday, April 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகத்துக்காக நல வாரியம் மற்றும் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் திரையுலகில் கடந்த ஒரு மாதமாக திரைப்படங்கள் எதுவும் வெளியிடாமலும், படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சம்பந்தமான எல்லா பணிகளையும் நிறுத்தி வைத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்த் திரை உலகத்துக்காக நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த்திரையுலகின் அனைவர் சார்பிலும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மேலும் திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகிறோம்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.