close
Choose your channels

'புஷ்பா 2' படத்தின் 'ஓ சொல்றியா' பாடலில் சமந்தா இல்லையா? அப்ப வேற யாரு?

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி இருந்தார் என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி இந்த ஒரு பாடலுக்கு மட்டுமே நடிகை சமந்தா ரூபாய் 5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ’புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம்பெற உள்ளதாகவும் ஆனால் இந்த பாடலில் சமந்தா நடனம் ஆட போவதில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ’புஷ்பா’ படத்திலும் திஷா பதானிக்குத்தான் இந்த பாடலில் நடனம் ஆட வாய்ப்பு வந்தது என்பதும், ஆனால் திஷா ஆட மறுத்து விட்டதை அடுத்தே சமந்தா நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இரண்டாவது பாகத்தில் நடனம் ஆட திஷா ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.