close
Choose your channels

கண்ணீர் விட்டு கதறிய வீடியோவை வெளியிட்ட 'புஷ்பா' பட நடிகை.. என்ன காரணம்?

Sunday, August 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் கண்ணீருடன் அழுத வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் அனுசுயா. அதன் பிறகு ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து திரையுலகில் அறிமுகமானார். குறிப்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் என்பதும் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கௌதம் மேனன் நடித்த ’மைக்கேல்’ என்ற திரைப்படத்தில் அவருக்கு நம் மனைவியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அழுது கொண்டே நடிகை அனுசுயா ஒரு பதிவை செய்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் சமூக வலைதளங்கள் என்பது எதற்காக உருவாக்கப்பட்டது என்று தெரியாமல் பலர் பயன்படுத்தி வருகின்றனர். நான் என்னுடைய புகைப்படங்கள் வீடியோக்களை மகிழ்ச்சியாக வெளியிடுகிறேன் என்று சமூக வலைத்தளங்கள் குறித்த நீண்ட பதிவை செய்து விட்டு, இப்போது நான் நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த பதிவில் அவர் எதற்காக அழுகிறேன் என்று கடைசி வரை கூறவில்லை என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து இந்த வீடியோவில் நீங்கள் எதற்காக அழுகிறீர்கள் என்பதை சொல்லிவிட்டு அழுங்கள் என பல தங்களது கமெண்ட்ஸ் கலை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.