தாதா சாகேப் பால்கே விருது விழாவில் ரஜினி: வைரல் புகைப்படங்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த விருது இன்று அவருக்கு வழங்கப்பட உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தாதாசாகிப் பால்கே விருது பெறுவதற்காக நேற்று சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அவர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றார் என்பதும், அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி என்றும், தனக்கு இந்த விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த விருது கிடைக்கும் நேரத்தில் பாலசந்தர் அவர்கள் அருகில் இல்லாமல் இருப்பது தனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது என்று அறிவித்திருந்தார்
இந்த நிலையில் இன்று விருது வழங்கும் விழா இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ள நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் விருது வழங்கும் விழாவின் அரங்கில் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் யாத்ரா தனுஷ் ஆகியோர் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments