close
Choose your channels

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ரஜினியின் அழைப்பு

Tuesday, September 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஞாயிறு அன்று திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு விழாவிற்காக மதுரை சென்ற நடிகர் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு ஒன்றும் இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாக சிவகார்த்திகேயனும், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கமல்ஹாசன் தரப்பில் இருந்து கூறப்பட்டாலும், மதுரை சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கியதாக தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் குறித்து பதிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மதுரையில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொண்டாராம். மேலும் பொது இடத்திற்கு செல்வதை குறைத்து கொள்ளுமாறும், பேட்டி கொடுக்கும்போது கவனமாக இருக்குமாறும் சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது.

மதுரையில் நடந்த சம்பவம் குறித்து சூப்பர் ஸ்டாரே நேரில் தன்னை தொடர்பு கொண்டு விசாரித்ததில் நெகிழ்ந்து போயுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.