close
Choose your channels

விஜயகாந்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது! தீவுத்திடலில் அஞ்சலி செய்த ரஜினிகாந்த் பேட்டி..!

Friday, December 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் ஏராளமான அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது அவரது உடல் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தகுந்த பாதுகாப்புடன் பொதுமக்கள் அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். இன்று காலை அவர் தீவு திடல் சென்று விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது விஜயகாந்த்தை இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவருடைய அசாத்திய மன உறுதி காரணமாக எப்படியும் உடல்நிலை தேறி வந்து விடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் சமீபத்தில் நடந்த பொது குழுவில் அவரை பார்த்தபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்துவிட்டது.

அவர் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழக மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், விஜயகாந்த், இரங்கல்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.