close
Choose your channels

தெலுங்கு திரையுலகை வறுத்தெடுத்த ரஜினி பட நாயகி.. அப்படி என்ன சொன்னார்?

Friday, February 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை, தெலுங்கு திரையுலகை வறுத்து எடுத்து அளித்துள்ள பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’கபாலி’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் அவ்வப்போது தரும் பேட்டியில் சில தைரியமான கருத்துக்களை வெளிப்படுத்துவார் என்பதும், குறிப்பாக அவரது கருத்தில் சமூக அக்கறை, பெண்களின் பாதுகாப்பு குறித்து கண்டிப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தெலுங்கு திரையுலகை வறுத்தெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்த ஒன்று, பெண்களை அவர்கள் நடத்தும் இடம் சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், பெண்களுக்கு வழங்கும் கேரக்டர்களும் மிகவும் கொடுமையாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அங்கு நடிகர்கள் நடந்து கொள்ளும் விதமும் எனக்கு சுத்தமாக பிடிக்காது, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென நடிகர்கள் மூட் சரியில்லை என்று கூறி சென்று விடுவார்கள், ஆனால் படக்குழுவினர் அந்த நடிகர்களை ஒன்றுமே சொல்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

நான் தெலுங்கு படங்களில் நடிக்கும் போது மிகவும் கஷ்டப்பட்டேன், அதன் பிறகு ஒரு கட்டத்தில் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.