close
Choose your channels

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தென்னிந்திய நடிகை

Saturday, February 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான 'சீம்ராஜா' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பிசியாக உள்ள பிரபல தென்னிந்திய நடிகை ராகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா, கார்த்தி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராகுலின் கேரக்டர் இதுவரை அவர் நடித்திராத வித்தியாச வேடம் என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக இயக்குனர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்
 
இயக்குனர் ரவிகுமாரின் முந்தைய படம் போலவே இந்த படத்தின் திரைக்கதையும் விஞ்ஞான ரீதியிலானது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கி வரும் 2019ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.