close
Choose your channels

வைர வியாபாரி மகளுக்கே வைரம் பரிசா? தமன்னாவுக்கு கிஃப்ட் கொடுத்த நடிகரின் மனைவி..!

Tuesday, July 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தமன்னா மகாராஷ்டிராவை சேர்ந்த வைர வியாபாரி ஒருவரின் மகள் என்பதும் அவர் நடிக்க வரும் போதே கோடீஸ்வரர் என்றும் கூறப்படுவது உண்டு. இந்த நிலையில் உலகில் ஐந்தாவது மிகப்பெரிய வைரத்தை தமன்னாவுக்கு பரிசாக பிரபல நடிகரின் மனைவி கொடுத்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வைர வியாபாரியின் மகள் தான் தமன்னா என்பதும் இவர் திரையுலகின் மீது இருந்த ஈர்ப்பு காரணமாக நடிகையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தமன்னா கடந்த 2019 ஆம் ஆண்டு சிரஞ்சீவி நடித்த ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரணின் மனைவி உபாசனா தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமன்னாவுக்கு விலை உயர்ந்த வைரத்தை உபாசனா கொடுத்ததாகவும் அதுதான் உலகின் ஐந்தாவது பெரிய வைரம் என்று கூறப்படுகிறது.

ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த வைரத்தை தற்போதும் தமன்னா, உபாசனா நினைவாக பாதுகாப்பாக வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. வைர வியாபாரியின் மகளுக்கே வைரத்தை பரிசாக ராம்சரண் மனைவி உபாசனா கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.