close
Choose your channels

ஸ்ரீதேவிக்கு காதல் கடிதம் எழுதிய பிரபல இயக்குனர்

Monday, November 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் சர்ச்சை நாயகன் யார்? என்று கேட்டால் சின்னக்குழந்தை கூட உடனே இயக்குனர் ராம்கோபால் வர்மா என்று கூறிவிடும். அந்த அளவுக்கு நாள்தோறும் புதுப்புது சர்ச்சைகளை ஏற்படுத்தி எந்நேரமும் பரபரப்பிலே இருப்பார். சாதாரணமாகவே சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ராம்கோபால்வர்மா சுயசரிதை எழுதினால் அதில் சர்ச்சைகள் இல்லாமல் இருக்குமா?

இயக்குநர் ராம்கோபல் வர்மா தற்போது “கன்ஸ் அன்ட் தைஸ்” என்ற தலைப்பில் சுயசரிதையை எழுதி வருகிறார். அந்த சுயசரிதையில் நடிகை ஸ்ரீதேவியை அழகு தேவதை என்று வர்ணித்து எழுதியுள்ளார்.

வானில் இருந்து இறங்கி வந்த தேவதையான ஸ்ரீதேவியை வெறும் சமையல் அறையில் பூட்டி வைத்த அவரது கணவர் போனிகபூரை தன்னால் மன்னிக்கவே முடியாது என்று கூறியுள்ள ராம்கோபால் வர்மா, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் மீது ஈர்ப்பு வரலாம். அந்த உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம். இவையெல்லாம் ஒரு போதை போன்றது தான்' என்று கூறியுள்ளார்.

தனது சுயசரிதையில் ஸ்ரீதேவியைப் பற்றி குறிப்பிட்டுள்ளவற்றை “ஒர் காதல் கடிதம்” போன்றது என்று கூறியுள்ள வர்மா, அவருக்கும் ஸ்ரீதேவிக்குமான அன்பு குறித்தும் அக்காதல் கடிதத்தில் எழுதி அவர் விலாவரியாக எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.