close
Choose your channels

சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்' மீண்டும் ரிலீஸ் ஆவது ஏன்?

Friday, May 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால், சரத்குமார் நடித்த 'நிமிர்ந்து நில்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜெயம் ரவி வேடத்தில் நானி நடித்தார். தமிழில் நாயகியாக நடித்த அமலாபால் தெலுங்கிலும் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'நிமிர்ந்து நில்' என்ற பெயரில் தமிழிலும், 'ஜெண்டாபாய் கபிராஜு' என்ற பெயரில் தெலுங்கிலும் இந்த படம் ஒரே நாளில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகிய இந்த படம் தற்போது மீண்டும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

அதாவது தெலுங்கில் வெளியான 'ஜெண்டாபாய் கபிராஜூ' என்ற திரைப்படம் தமிழில் 'வேலன் எட்டுதிக்கும்' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கடந்த 80கள் மற்றும் 90களில் முன்னணி நடிகர்களின் சில படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு பின்னர் தெலுங்கு பதிப்பு மீண்டும் தமிழில் டப் செய்து வெளியானது போல், தற்போது இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.