close
Choose your channels

அப்ப எல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு உங்களுக்கு தெரியாதா? 

Sunday, November 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் பிரதீப் மீது குற்றம் சாட்டியவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்து கொண்ட நடிகர் சனம்ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது மிகவும் மோசமான செயல். சரியான காரணம் சொல்லி ரெட்கார்டு கொடுத்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம், அல்லது காரணமே சொல்லாமல் கொடுத்திருந்தால் கூட அதையும் ஏற்றுக் கொண்டிருக்கலாம், ஆனால் ஒரு சிலருடைய குற்றச்சாட்டை மட்டும் நம்பி ஒரு சைடாக பார்த்து, பிரதீப் தனது நிலையை கூட சொல்ல விடாமல், அவர் செய்யாத ஒரு விஷயத்தை கூறி, அவரை வெளியேற்றியது மிகவும் மோசமான ஒரு செயல்.

பெண்களுக்கு அவருக்கு ஆபத்து என்று கூறப்பட்டிருப்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் மீது குற்றச்சாட்டு கூறிய இதே போட்டியாளர்கள் தான் ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை அவருடன் இணக்கமாக பேசினார்கள், நட்புடன் பழகினார்கள், ஆனால் திடீரென கமல்ஹாசன் வரும் நாளில் மட்டும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆகிவிட்டதா?. இது முழுக்க முழுக்க ஒரு தலைப்பட்சமான முடிவாக தெரிகிறது.

பிரதீப் அவர்கள் நிறைய நல்லது செய்திருக்கலாம், கெட்டது செய்திருக்கலாம், ஆனால் இனி நடந்ததை மறந்து விட்டு உங்கள் தொழிலில் மட்டும் கவனம் செலுத்துங்கள், கண்டிப்பாக நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.