close
Choose your channels

'சண்டக்கோழி' மூன்றாம் பாகம் குறித்து லிங்குசாமி

Sunday, October 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லிங்குசாமி, 'சண்டக்கோழி 3' படத்தின் திரைக்கதை விரைவில் தயாராகவிருப்பதாகவும் மூன்றாம் பாகத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார் சண்டக்கோழி முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே 13 வருடங்கள் இடைவெளி ஆகிவிட்டது. ஆனால் 'சண்டக்கோழி 3' படத்தின் பணிகள் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். .

விஷாலை வைத்து தன்னால் வேறு படம் இயக்க முடியாது என்றும் இயக்கவும் தோணவில்லை என்று கூறிய லிங்குசாமி, எனக்கு எந்த வேலை இருந்தாலும் சரி, விஷால் எத்தனை படங்களில் கமிட் ஆகியிருந்தாலும் சரி, விரைவில் 'சண்டக்கோழி 3 தொடங்கப்படும் என்பது உறுதி என்று லிங்குசாமி தெரிவித்தார். எனவே முனி, சிங்கம் படங்களை அடுத்து சண்டக்கோழி படத்தின் மூன்றாம் பாகத்தையும் விரைவில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.