close
Choose your channels

பிக்பாஸ் பைனலில் கமல் முன் ரஜினி வசனத்தை கூறிய சாண்டி

Monday, October 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 3 பைனல் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே நேற்று டைட்டில் பட்டத்தை முகின் வென்றார். பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்ற முகினுக்கு சக போட்டியாளர்கள், பிக்பாஸ் ரசிகர்கள், பார்வையாளர்கள், கமலஹாசன் மற்றும் விஜய் டிவி நிர்வாகம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 வின்னராக முகின் அறிவிக்கப்பட்டதும் முதல் வாழ்த்து தெரிவித்தவர் இரண்டாம் இடத்தைப் பிடித்த சாண்டிதான். இந்த அறிவிப்பு வெளியானதும் சாண்டியின் குடும்பத்தினர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும், தனக்கு பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் எண்ணம் கிடையாது என்றும், தானும் கவினும் இணைந்து தர்ஷன் அல்லது முகின் ஆகிய இருவரில் ஒருவரை வின்னராக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், தர்ஷன் வெளியேறியதும் முகின் தான் வின்னர் என்பதை தான் திட்டவட்டமாக முடிவு செய்ததாகவும் சாண்டி தெரிவித்தார்.

மேலும் முகினுக்கு வாழ்த்து தெரிவித்த சாண்டி, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு மேடையில் சொல்லியது போல் ’நான் யானை அல்ல குதிரை, விழுந்தால் உடனே டக்கென்று எழுந்து விடுவேன் என்று இடையில் முகின் திணறினாலும் உடனடியாக சுதாரித்து எழுந்து டைட்டில் பட்டத்தை வென்றுள்ளதாக சாண்டி கூறினார். கமலஹாசன் முன்னிலையில் ரஜினிகாந்த் பேசிய வசனத்தை சாண்டி கூறியபோது அதனை கமல்ஹாசனும் ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எந்தமொழி பேசுபவராக இருந்தாலும் தமிழகத்திற்கு வந்தால் வாழ வைக்கும் தமிழகம், தமிழ் மொழி பேசுபவரை வாழ வைக்காமல் விடுமா? என்றும் சாண்டி கூறினார். சாண்டியின் இந்த பேச்சு அவரது பரந்த எண்ணத்தை காட்டுவதாகவும், அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.