close
Choose your channels

பாராளுமன்ற தேர்தலில் சரத்குமார், ராதிகா இருவருமே போட்டியா? எந்த தொகுதியில்?

Thursday, March 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே சில திரை உலக நட்சத்திரங்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருமே வரும் தேர்தலில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலக நட்சத்திரங்களான குஷ்பு, காயத்ரி ரகுராம், கௌதமி, ஷோபனா ஆகியோர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மலையாள நடிகர் சுரேஷ்கோபி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்ட நிலையில் கங்கனா ரனாவத் உள்ளிட்ட இன்னும் சில நட்சத்திரங்களும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அவருக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் திருநெல்வேலி தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் சரத்குமாருக்கு வேறு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் நடிகை ராதிகாவும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்றும் அவருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருமே வரும் தேர்தலில் போட்டியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos