close
Choose your channels

பிறந்த நாளில் வெள்ள நிவாரண நிதியளித்த சரோஜாதேவி

Thursday, January 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சரோஜாதேவி நடிகர்சங்க உறுப்பினர்களின் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அவருக்கு நடிகர் சிவகுமார் கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், மனோபாலா, குட்டிபத்மினி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள காசோலையை சரோஜாதேவி வழங்கினார். சரோஜாதேவி நாயகியாக நடித்த காலத்தில் ஆயிரக்கணக்கில் மட்டுமே சம்பளமாக இருந்தது. இந்நிலையில் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கொடுத்த வெள்ள நிவாரண நிதிக்கு இணையாக சரோஜாதேவியும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.