close
Choose your channels

புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும் ! செல்வராகவனின் பதிவால் பரபரப்பு..

Tuesday, April 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில தத்துவ கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை இணையத்தில் வைரலாகும் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் அவர் சில நிமிடங்களுக்கு முன்பு பதிவு செய்த கருத்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் செல்வராகவன் ’துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் கதாசிரியராக திரையுலகில் நுழைந்து அதன் பின் ’காதல் கொண்டேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதனை அடுத்து ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ ’ஆயிரத்தில் ஒருவன்’ ’மயக்கம் என்ன’ ’இரண்டாம் உலகம்’ ’என் ஜி கே’ ’நெஞ்சம் மறப்பதில்லை’ ’நானே வருவேன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்

தற்போது அவர் ’7ஜி ரெயின்போ காலனி’ இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் என்பதும் விரைவில் அவர் ’ஆயிரத்தில் ஒருவன்’ ’புதுப்பேட்டை’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்தும் வருகிறார் என்பதும் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி அதன்பின் ’சாணிக்காகிதம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ராயன்’ படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஏராளமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் செல்வராகவன் அவ்வப்போது தத்துவ கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த கருத்து பின்வருமாறு:

ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.