close
Choose your channels

பவர்பாண்டி' படத்தை பார்த்து பாராட்டிய தனுஷின் குரு

Wednesday, October 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக நடந்து வருகிறது. தனுஷின் வேகத்தை பார்த்தால் இன்னும் ஒருசில நாட்களிலே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் தான் இதுவரை எடுத்த காட்சிகளை தனது சகோதரரும் குருவுமாகிய செல்வராகவனிடம் சமீபத்தில் போட்டு காட்டியதாகவும், அந்த காட்சிகளை பார்த்த செல்வராகவும் தனுஷை பாராட்டியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, 'பவர்பாண்டி' படத்தின் ரஷ்ஷை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். காமெடி, மேஜிக்கல் மற்றும் மனதை தொடும் வகையில் இந்த படம் உள்ளது.
நான் தனுஷை நினைத்து பெருமைப்படுகிறேன். அதே நேரத்தில் இந்த படத்தின் கேரக்டருக்கு பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராஜ்கிரண் அவர்களின் நடிப்பும் மிக அபாரம்' என்று கூறியுள்ளார். தனுஷ் தனது குருவிடமே பாராட்டு பெற்றுள்ளதால் இந்த படத்தின் வெற்றியில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.