close
Choose your channels

காதலர் தினத்தில் கர்ப்பமான செய்தியை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை!

Monday, February 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதலர் தினத்தில் திரைஉலக மற்றும் சின்ன திரையுலக நட்சத்திரங்கள் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தான் கர்ப்பமான செய்தியை தனது ரசிகர்களுக்கு காதலர் தினத்தில் தெரிவித்துள்ளார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’காற்றுக்கென்ன வேலி’ சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’பூவே உனக்காக’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ரீதேவி அசோக். 12 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை உலகில் பிரபலமாக இருந்து வரும் இவர் ’ராஜா ராணி’ ’தங்கம்’ ’கல்யாணபரிசு’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தனுஷ் நடித்த ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் ஸ்ரீதேவி அசோக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதலர் தினத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை தனது ரசிகர்களுக்கு செய்தியாக கூறி கணவருடன் உள்ள புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த நல்ல செய்தியை கூறிய ஸ்ரீதேவி அசோக் மற்றும் அவரது கணவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.