close
Choose your channels

என் கணவர் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை, காமப்படங்கள் மட்டுமே தயாரித்தார்: ஷில்பா ஷெட்டி

Saturday, July 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆபாச படங்கள் எடுத்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மும்பை காவல்துறையினர் ஷில்பா ஷெட்டியை விசாரித்தபோது அவர் வாக்குமூலத்தில் சில தகவல்களை அளித்துள்ளதாக தெரிகிறது. எனது கணவர் எரோடிகா என்னும் காமப்படங்களை மட்டும் தான் தயாரித்தார் என்றும் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை என்றும் காமப்படங்களுக்கும் ஆபாச படங்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் ராஜ்குந்த்ரா அப்பாவி என்றும் அவருக்கும் ஆபாச பட விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ஆபாச படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தனது கணவர் அப்பாவி என்றும் ஆபாச படங்களை தயாரிக்கவில்லை காமப்படங்கள் மட்டுமே தயாரித்து உள்ளதாக ஷில்பா ஷெட்டி கூறியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ராஜ்குந்த்ராவின் வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 7.5 கோடி ரூபாயை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.