close
Choose your channels

திருமணமான ஒருசில மாதங்களில் கணவரை பிரிந்த தமிழ் நடிகை!

Friday, February 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் திருமணமான ஒரு சில மாதங்களில் கணவரை விவாகரத்து செய்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் ’ராரா’ ’சந்தமாமா’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகை ஸ்வேதா பாசு இவர் தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்வேதாவுக்கும் இயக்குனர் ரோஹித் மிட்டல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணமான எட்டே மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் தற்போது ஸ்வேதா பாசு தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறிய போது, ‘நானும் ரோஹித் மிட்டலும் தற்போது பிரிந்து விட்டோம். இருவரும் மாதக்கணக்கில் யோசித்து அதன்பின்னர் இருவரும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன் பிரியும் முடிவை நாங்கள் இருவரும் இணைந்தே எடுத்தோம்.

அனைத்து புத்தகங்களும் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை வாசிக்கப்படுகிறது இல்லை. அதற்காக அந்த புத்தகம் மோசமானது என்றும் வாசிக்க முடியாத புத்தகம் என்று கூறமுடியாது. சில விஷயங்களை முடிக்காமல் அப்படியே விட்டு விட வேண்டும். இதுவரை எனக்கு உறுதுணையாக இருந்த ரோஹித்துக்கு நன்றி. நான் என்றும் உங்களுக்கு அன்புக்கு உரியவராக இருப்பேன்; என்று தெரிவித்துள்ளார்

திருமணமான ஒரு சில மாதங்களில் நடிகை ஸ்வேதாபாசு தனது கணவரை செய்திருப்பது பெரும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.