close
Choose your channels

போதைப்பொருள் விவகாரம்: சிம்பு பட இயக்குனர் தலைமறைவா?

Friday, March 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் போதை பொருள் விவகாரத்தில் ஒரு சில திரை உலக பிரபலங்கள் சிக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சிம்பு படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் போதைப்பொருள் விவகாரம் காரணமாக தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு மற்றும் அனுஷ்கா நடித்த ’வானம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கிரிஷ் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும் அப்போது அவர் போதை பொருள் உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு வருமாறு காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக திடீரென இயக்குனர் கிரிஷ் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் தற்போது மும்பையில் இருப்பதாகவும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. போதைப்பொருள் விவகாரத்தில் தெலுங்கு பட பிரபல இயக்குனர் ஒருவர் சிக்கி இருப்பதாக கூறப்படுவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.