close
Choose your channels

கமல் ரசிகர்கள் மீது ஏன் புகார் கொடுக்கவில்லை?- சிவகார்த்திகேயன்

Monday, October 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த படமான 'ரெமோ' மட்டும் வெற்றி பெறவில்லை, பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் அவர் அளித்த பதில்களை பார்க்கும்போது அவர் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அவருடைய மெச்சூரிட்டியான பதில் அவருடைய மனித நேயத்தை வெளிக்காட்டும் வகையில் இருந்தது என்றும் நினைக்க தோன்றுகிறது.
இந்த பேட்டியின் ஒரு அம்சமாக கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், 'அந்த சம்பவத்தில் என்னை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வீடியோ இருந்தாலும் நான் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
என்னுடைய தந்தை ஒரு சிறை அதிகாரி என்பதால் நான் சிறையை நேரில் பார்த்துள்ளேன். சிறை வாழ்க்கை எவ்வளவும் கொடுமையானது என்பதும் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் படும் வேதனையும் எனக்கு தெரியும். புகார் கொடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை. அதனால் தான் என்னுடைய வேலையை பார்க்க நான் சென்றுவிட்டேன்' என்று கூறினார்.
இந்த பேட்டியை எடுத்தவர் முதல் பார்த்தவர்கள் வரை அனைவரும் தெரிந்து கொண்டது ஒரே ஒரு விஷயம்தான். சிவா, எந்த வம்புக்கும் செல்லாதவர், அவர் வேலையை மட்டும் பார்ப்பவர் என்பதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.